பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

65பார்த்தது
பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மும்முனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நூலக வாசிப்பு திட்டத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாதன் வேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் செந்தமிழ்ச் செல்வன் வரவேற்றார். மாணவர்கள் பங்கேற்ற பேச்சு, பாடல்கள் மற்றும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நூலக வாசிப்பு மேம்பாட்டிற்கு வரலாற்று நூல்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், இரயில்வே துறை மேலாளர் சு. தனசேகரன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி