முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.

74பார்த்தது
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி செயலாளர் மு. ரமணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எஸ். ருக்மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் எஸ். மைதிலி பங்கேற்று முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் கடந்த ஆண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இக்கல்லூரியில் சேர்ந்த 27 மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 5000/- காசோலை வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி