வந்தவாசியில் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அதியங்குப்பம், எஸ். மோட்டூர் பழங்குடி இருளர் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள்சங்கம் ஆர்ப்பாட்டம் எஸ். ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் சி பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாதிரி ராஜா அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் இரா. சரவணன் சிறப்புரை ஆற்றினார்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பா. செல்வன் விளக்க உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் சேகரன், சி பி எம் வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர் ஆர்ப்பாட்டத்தில் வந்தவாசி அடுத்த அதியங்குப்பம் பழங்குடி இருளர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு.

வந்தவாசி அடுத்த எஸ். மோட்டூர் கிராம பழங்குடி இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கு. பழங்குடியின காட்டுநாயக்கன் இருளர் மக்களுக்கு இனச்சான்று வழங்கு. குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த அனைத்து பழங்குடி மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கு. வீட்டுமனை பட்டா இல்லாத இருளர், காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டாவை உடனே வழங்கு என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்படது இதில் 200 க் மேற்பட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி