திருவண்ணாமலையில் மகாத்மா காந்தி போல் வேடமிட்டு முதியவர் ஒருவர் திருவண்ணாமலை முக்கிய வீதிகளில் மௌனமாக நடந்த சென்றார். அவர் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை விருப்பப்பட்டவர்கள் அளிக்கும் உதவிகளை தயங்காமல் ஏற்றுக் கொண்டார். வயது வித்தியாசம் இல்லாமல் அருகில் வந்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார். இவரை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.