சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

81பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 31; தனியார் நிறுவன டிரைவர். இவரது நண்பர் சந்திரசேகர், 18; தனியார் இன்ஜினீயரிங் கல்லுாரியில், 2-ம் ஆண்டு மாணவர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, ஹோண்டா பைக்கில் செங்கத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். அன்றிரவு, 11: 00 மணியளவில், புதுச்சேரி - பெங்களூரு சாலையில், மேல்செங்கம் அருகே வந்தபோது, அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேல்செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி