அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

75பார்த்தது
செங்கம் அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் பகுதியில் உள்ள கேசவந்தாங்கள் ஏரி பெரிய ஏரி குலுக்கந்தாங்கள் ஏரி ஆகிய மூன்று ஏரிகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வரத்துக்கால்வாய் ஏறிப் பகுதிகளை ஆக்கமித்து குலமாக மாற்றி விவசாயம் செய்து வரும் நிலையில் அதனை அகற்றக்கோரி அப்பகுதி கிராம மக்கள் வட்டாட்சியர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மாவட்ட ஆட்சியர் என பலமுறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து செங்கத்தில் இருந்து அரட்டவாடி செல்லும் கிராம சாலையில் அரசு பேருந்து சிறை பிடித்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வராத நிலையில் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் துறை சார்ந்த அதிகாரியிடம் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி