மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ

75பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மண்டலம்- 2ல் உள்ள ஊராட்சிகளுக்கான சேவைகளை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பெருங்குளத்தூர் ஊராட்சியில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுசு, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர்கள் முத்துமாறன், சத்யா வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகான், கார்த்திக் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வசந்த், ரகுபதி, வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி