தக்ஷிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை

75பார்த்தது
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி கோவிலில் நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலை முதல் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி