பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

58பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், மணலூர்பேட்டை சாலை - காட்டாம்பூண்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி, முதல் மற்றும் 2-வது கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு மங்கள வாத்திய இசை முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு பெரியாயி அம்மனுக்கும், அதைத்தொடர்ந்து 108 பிள்ளையார், சப்த கன்னிகள், அய்யனார் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அபிஷேக ஆராதனை முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி