வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிப்பதற்கு அஞ்சல் அட்டையில் 'உங்கள் உரிமை உங்கள் வாக்கு' என்ற வாசகத்தை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திவ்யா, கமலேஷ் ஆகியோர் கடிதம் எழுதி அனுப்பி வருகின்றனர். இவர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.