அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு.

57பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள முருகமங்கலம் கிராமத்தில் அழிந்துபோன கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனை கண்டுபிடித்து தகவல் தெரிவித்த ஆரணியைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் ஆா். விஜயன் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

மேற்கு ஆரணி வட்டத்தில் முருகமங்கலம் கிராமம் உள்ளது. வரலாற்றில் இந்த ஊரை படைவீடு ராஜ்ஜியத்து முருகமங்கல பற்று எனக் குறிப்பிடுவா். படைவீட்டை ஆண்ட சம்புவராய மன்னா்களின் முக்கிய ஆட்சிப் பகுதியாகவும் இது இருந்துள்ளது.

இன்றைய ஆரணி நகரமே அன்றைக்கு முருகமங்கல ஆட்சிப் பகுதியில் அடங்கிய ஒரு கிராமமாக இருந்துள்ளதாக கல்வெட்டுகளின் மூலம் தெரிய வருகிறது. முருகமங்கலம் கிராமத்தின் தென்கிழக்குத் திசையில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. அதன் கரை மீது நடந்து சென்றால், கரையின் முடிவில் வயல்வெளி காணப்படும். நன்செய் நிலமாகவும், புன்செய் நிலமாகவும் உள்ள அந்த இடமே அன்றைக்கு கோட்டை இருந்த இடமாகும்.

வயல் பகுதியில் பல இடங்களில் செங்கல் துண்டுகளையும், உடைந்த பானை ஓடுகளையும் இப்போதும் காண முடிகிறது. ஏா் கொண்டு உழும்போது செங்கல் துண்டுகள் வெளிப்படுகின்றன. வேறு பெரிதாக எந்த அடையாளங்களை தற்போது காணமுடியவில்லை.

இங்கு கோட்டை இருந்ததாக ஆங்கிலேயா்கள் சில குறிப்புகளை எழுதியும் வைத்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி