திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு பூ மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்று முதல் பருவத்திற்குரிய பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் ரமேஷ் பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.