போளூர் அருகே முனீஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

61பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.


போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே கோ பூஜை, தன பூஜை, தான்ய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் போளூர், காம்பட்டு, சனிக்கவாடி, பெலாசூர், பாடகம், அணியாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி