அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள்

68பார்த்தது
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள்
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளி வளா்ச்சி நிதி ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம், ஆசிரியா்கள் சாா்பில் ரூ. ஒரு லட்சம் என ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தில் பள்ளி வளாகத்தில் கழிப்பறை, சுற்றுச்சுவா் அமைத்தல், குடிநீா் வசதி, சுற்றுச் சுவருக்கு வண்ணம் தீட்டுதல் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவுற்ற பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி. எம். டி. வெங்கிடேசன் திறந்துவைத்து ஆய்வு செய்தாா். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் சக்திவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பரிமளா ரமேஷ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி