பலத்த காற்று வீசியதில் முறிந்த பழமையான மரம்

68பார்த்தது
பலத்த காற்று வீசியதில் முறிந்த பழமையான மரம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், துரிஞ்சி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மனந்தல் பகுதியில் ஆத்துவம்பாடி செல்லும் சாலையில் சுமார் 80 ஆண்டுகால பழமையான ஆலமரம் இன்று மாலை 6: 00 மணியளவில் பலத்த காற்று வீசியதன் காரணமாக வேருடன் சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடைக்கு இயந்திரத்தில் நெல் சேமிக்கும் பெட்டி மீது விழுந்ததால் முழுவதும் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி