அமராவதி ஆற்றின் படித்துறை பராமரிக்க வலியுறுத்தல்

50பார்த்தது
அமராவதி ஆற்றின் படித்துறை பராமரிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்லாபுரம் ஊராட்சியில் 1500க்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள அமராவதி ஆற்றகரையில் மேடான பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளது முன்பு ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து செல்லவும் இதர தேவைகளுக்காகவும் படித்துறை அமைக்கப்பட்டிருந்தது கடந்த
சில ஆண்டுகளாகவே பரிந்துரை முறையாக பராமரிக்கப்படாமல் இடிந்து விழுந்த நிலையில் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் இடமாகவும் குப்பைகள் கொட்டும்இடமாக மாறி வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமராவதி ஆற்றின் படித்துறையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி