திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பொதுமக்கள் வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள்
கொடுத்து பதிவு செய்து கொண்டனர். துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்