மாணவிக்கு மெசேஜ் அனுப்புவதில் தகராறு

77பார்த்தது
மாணவிக்கு மெசேஜ் அனுப்புவதில் தகராறு
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாத் மாவட்டம், பகவத் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையே, அதே பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு செல்போனில் தொடர்பு கொள்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு கும்பலுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உச்சகட்டமாக துப்பாக்கிசூடும் நடைபெற்றதை தொடர்ந்து, காவல் துறையினர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி