உடுமலையில் மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது

77பார்த்தது
உடுமலையில் மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேசனல் லோக் அதாலத்) நடைபெற்றது. 2 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம். மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. எஸ். பாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நித்யகலா, ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அதன்படி 221 தண்டனைக்குரிய சிறு வழக்குகள் ரூ 7 லட்சத்து 25 ஆயிரத்து 550 க்கும், 4 காசோலை மோசடி வழக்குகள் ரூ 17 லட்சத்து 11 ஆயிரத்து 199 க்கும், 29 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ 1 கோடியே 57 லட்சத்து 21 ஆயிரத்து 500 க்கும், 4 இதர சிவில் வழக்குகள் ரூ 1 கோடியே 10 லட்சத்து 87 ஆயிரத்து 34 க்கும் ஆக மொத்தம் 259 வழக்குகளுக்கு ரூ 3 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரத்து 283 க்கு தீர்வு காணப்பட்டது.
இதில் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி