உடுமலை அரசு கலை கல்லூரியில் 2-ம் நாள் மாணவர் சேர்க்கை

56பார்த்தது
உடுமலை அரசு கலை கல்லூரியில் 2-ம் நாள் மாணவர் சேர்க்கை
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி கடந்த மே மாதம் 28 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் 2001 முதல் 4000 வரையிலான இடங்களைப் பெற்றிருந்த மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது இயற்பியல் பிரிவில் 8, வேதியியல் பிரிவில் 18 மாணவர்களும், தாவரவியல் பிரிவில் 11 மாணவரும், கணிதவியல் பிரிவில் 5
மாணவர்களும், கணினிஅறிவியல் பிரிவில் 34 மாணவர்களும், அரசியல்அறிவியல் பிரிவில் 17 மாணவர்களும், புள்ளியியல் பிரிவில் 9 மாணவர்களும், பொருளியல்பிரிவில் 24 மாணவர்களும், பி. காம் பிரிவில் 36 மாணவர்களும், பிகாம் (சிஏ) பிரிவில் 23 மாணவர்களும், பிகாம் (இ. காம்) பிரிவில் 23 மாணவர்களும், பிபிஏ பிரிவில் 23 மாணவர்கள் என மொத்தம் 231 மாணவர்கள் சேர்ந்தனர். இன்று வரை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 497 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கல்லூரி முதல்வர் முனைவர் சோ. கி. கல்யாணி தெரிவித்து உள்ளார்

தொடர்புடைய செய்தி