எழுத்தாளர் பாமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

65பார்த்தது
எழுத்தாளர் பாமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
2024 ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருது பெற்ற எழுத்தாளர் பாமாவுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத் தங்களது எழுத்தின் வழியாக உணர்த்தி மாற்றங்களுக்கு வித்திடும் எழுத்தாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். எழுத்தாளர் பாமா அவர்களை நாம் போற்றுவது காலத்தின் தேவையாகிறது. அவரது தாக்கம் புதிய பெண் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். உடல்நிலை காரணமாகத் தாமதமாக அவர் இந்த ஔவையார் விருதை பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த விருதை நான் வழங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அவரது எழுத்துகள் இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி