கவிழ்ந்து நின்ற லாரியால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

85பார்த்தது
திருப்பூர், புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென சாலையில் கவிழ்ந்து நின்ற லாரியால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த கிரானைட் கற்கள்ஏற்றி வந்த லாரி திருப்பத்தில் திரும்பிய போது சாலையோரம் கவிழ்ந்த காரணத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தில் வந்த ஓட்டுநர் உள்ளிட்டோர் வாகனத்தை சரி செய்ய முயன்றனர். பிரதான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. லாரியில் அதிகளவில் கிரானைட் கற்கள் இருந்ததால் லாரியை உடனடியாக சீர் செய்ய முடியாததாலும், பிரதான சாலை என்பதாலும் வாகனங்கள் அதிகளவில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். பிரதான சாலையான திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை குறுகிய சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி