கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது

77பார்த்தது
திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங் கம் சார்பில் கட்டுமான, உள் அலங்கார பொருட்கள் கண்காட்சி திருப்பூர்-காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹால் திருமண மண்டபத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் உள்ள 150 அரங்குகளில் கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இருக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளதுடன், ரூ. 200 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர். இதனால் கண்காட்சியின் அனைத்து அரங்கு களும் நிரம்பி வழிந்தன. இன்று (திங்கட்கி ழமை) இரவு 8 மணியுடன் இந்த கண்காட்சி நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி