தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்19-ந்தேதி நடக்கிறது

67பார்த்தது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்19-ந்தேதி நடக்கிறது
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவதுசிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19- ந்தேதி காலை 10. 30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் 4-வது தளத்தில், அறை எண் 439-ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமதிருப்பூர்என்ற முகவரியில்நடைபெறும் முகாமில்தனியார்துறை வேலையளிப்பவர்கள்கலந்து கொண்டுவேலை தேடுபவர்களைதேர்வுசெய்ய வருகிறார்கள். இந்த முகாமில் வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவ லக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத் துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப் போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ. டி. ஐ. , டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும் வேலை தேடுபவர்கள் https: //www. tnprivatejobs. tn. gov. in/ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு வரும் போது புதிய பதிவு மற்றும் பதிவு புதுப்பித் தல் செய்து கொள்ளலாம். மேலும் தகுதியு டையவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் / 0421-2999152, 9499055944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி