பல்லடத்தில் தனியார் காற்றாடியில் தீ விபத்து!!!

72பார்த்தது
பல்லடம் அருகே கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான காற்றலையில் கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அச்சம்!!


சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறை வீரர்கள்!!!



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் காற்றாலையிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். பல்லடம் அருகே தனியார் கற்றாலையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி