அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

63பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 42-வது வார்டுக்கு உட் பட்ட பாரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி யில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங் கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது. தெற்கு தொகுதி க. செல்வராஜ் எம். எல். ஏ. மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத் தகங்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித் தார்.

நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி. கே. டி. மு. நாகராஜன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநக ராட்சி உதவி ஆணையாளர் வினோத், கவுன் சிலர் திவாகரன், தி. மு. க. பகுதி செயலாளர் கள், மகளிர் அணியினர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவி கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி