பனியன் நிறுவன மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

61பார்த்தது
பனியன் நிறுவன மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
சம்பளம் கொடுக்காததால் ஆத்திரம்
பனியன் நிறுவன மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 48). இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகி றார். இவருடைய நிறுவனத்தில் திருநெல்வேலி அரியநாயகிபு ரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பவர் பணியாற்றி வந்தார். வெங்கடேசுக்கு சம்பளம் கொடுக்காமல் பாண்டி தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் தனது நண்பரானநவநீதன் (23) என்பவரை அழைத்துக் கொண்டு பாண்டியிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீதன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி