உடுமலை: காங்கிரஸ் மனித உரிமை துறை புதிய நிர்வாகிகள் கூட்டம்!

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் "புதிய நிர்வாகிகள்" அறிமுகக் கூட்டம் மாவட்ட தலைவர் கோல்டன் பாலு , மாவட்ட துணைத்தலைவர் முகமது இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் நகரத் தலைவர் கோ. ரவி , மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் துறை நகர தலைவராக ராஜாராம், நகரத் துணைத் தலைவராக சந்தோஷ் குமார் , உறுப்பினர்களாக பிரேம்குமார், அப்பாஸ் மந்தரி, பரத் கண்ணன் , பிரேம்குமார் , முகமது ரியாஸ் , அணு சஞ்சய் காந்த் ரஞ்சித் நியமிக்க பட்டனர்.

மேலும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜூ , ஆடிட்டர் சீனிவாசன் ,
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துக்குமார்,
உடுமலை நகராட்சி 4வது வார்டு காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் கலைவாணி சதீஷ்குமார் , மாவட்ட காங்கிரஸ் செயலாளர்
முருகன், மாவட்ட காங்கிரஸ் கலை இலக்கியப் பிரிவு தலைவர் குருநாதன், மடத்துக்குளம் சட்டமன்ற ஊடகப்பிரிவு தொகுதி அமைப்பாளர் கண்ணபிரான், மதன்குமார், திருச்சி முத்து, முன்னாள் கவுன்சிலர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி