சாலையில் சாய்ந்து கிடக்கும் தடுப்புகள் வாகன ஓட்டிகள் சிரமம்

77பார்த்தது
சாலையில் சாய்ந்து கிடக்கும் தடுப்புகள் வாகன ஓட்டிகள் சிரமம்
காற்றில் சாலையில் சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள் - வாகன ஓட்டிகள் சிரமம்

தற்போது காற்று அதிக வீசும் காலம் என்பதால் வழக்கமான காற்றை விட அதிகமான காற்று வீசுகிறது. இதனால் காங்கேயத்தில் பெரும்பாலான இடங்களில் அளவுக்கு அதிகமான காற்று வீசியதில் சாலைகளில் விபத்துக்களை தடுக்க வைத்திருந்த இரும்பு தடுப்புகள் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் குறுக்கே விழுந்துள்ள சாலை தடுப்புகளால் கூடுதலான போக்குவரத்து நெரிசல்களும், போக்குவரத்து பாதிப்பும், விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது போன்று சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் சாலை இரும்பு தடுப்புகளை முறையாக பயன்படும் படி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி