உடுமலையில் கூலித் தொழிலாளி மரணம் - உறவினர்கள் சாலை மறியல்!

1917பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்தவர் முருகன் (38). இவர் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள தென்னை மரங்கள் உள்ள தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முருகன் நேற்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தோட்டத்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முருகன் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர்
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில உள்ள உடுமலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்பு சம்பவ இடத்துக்கு வந்த காவல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறியதால் போராட்டத்தை உறவினர்கள் தற்காலிகமாக கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி