கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

1883பார்த்தது
கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த குரு என்பவர் மாதப்பூர்- சிங்கனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியே வந்த வாலிபர் ஒருவர் குருவை வழிம றித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பல் லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் திருப்பூர் அங்கேரி பாளையத்தைச்சேர்ந்த மணிகண்டன் (வயது30)என்பது தெரிய வந்தது இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி