சுடுகாட்டை மீட்டுத்தரக்கோரி விசிகவினர் ஆர்பாட்டம்

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கணியூர் ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் தனிநபர் ஆக்கிரமிப்பை மீட்கக்கோரியும் மற்றும் அந்த சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
மேலும்
கணியூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகத்தை புதுப்பித்துத் தரவேண்டும்,
ஆதிதிராவிடர் ஏழை எளிய வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்வேண்டும்,
கணியூர் மற்றும் ஜோத்தம்பட்டியில்
கழிவுநீர் பாதாள சாக்கடை அமைத்துத்தரவேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பபட்டது.
கணியூர் பேரூர் முகாம் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில்,
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ்வரன் முன்னிலையில்,
கணியூர் பேரூர் முகாம் பொருளாளர் தங்கவேல்,
திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் த. சதீஸ்குமார்,
விசிக விவசாய சங்கம் மாநில துனைச் செயலாளர்
வேலு. சிவக்குமார்,
அரசு போக்குவரத்து எல்எல்எப் மாநில துணை தலைவர்
சிடிசி சத்தியமூர்த்தி,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த மூர்த்தி
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் சீட்கவர் சேகர் தமிழ் நாகராஜ் வெற்றிகொன்டான் உட்பட பலர்கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி