திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எலுகாம்வலசு கிராமத்தில் வசித்து வரும் சலவைத் தொழிலாளி ராமசாமி. இவரது மனைவி இறந்து விட்டதால் 14 வயது மகள் மற்றும் 10 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அருகில் வசிப்பவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக புகார் தெரிவித்தும் காவல்துறையினர் புகாரை எடுக்க மறுத்து வருகின்றனர். எனவும் எனவே தங்களின் மூன்று பேரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் சலவை தொழிலாளி கண்ணீருடன் தெரிவித்து வருகிறார்.
ஆதரவற்ற சலவை தொழிலாளிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் முன் வரவேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.