மடத்துக்குளத்தில் மாநில அளவிலான களரி போட்டி..

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ்நாடு களரிப் பயட்டு அசோசியேசன் சார்பில், ஏழாவது மாநிலம் தழுவிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. துவக்க விழாவில் களரிப் பயிட்டு அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு செயலாளர் வீரமணி ஏற்பாட்டில், திருவனந்தபுரம் இந்தியன் பெடரேஷன் செயலாளர் வக்கீல் கே பி பூந்துறை சோமன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மடத்துக்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே விஜயகுமார் மற்றும் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர்.
கோவை, ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தனித்திறன், வாள் சண்டை, சுருள்வால் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி