சூறாவளி காற்றுடன் மழை

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் கடந்து இரண்டு தினங்களாக கடுமையான காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. சில சமயம் இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மடத்துக்குளம் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பொதுமக்கள் சிலர் காய்ச்சல் , சளி உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்குமாறும், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அனுகி ஆலோசனை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி