விசிக மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் விண்ணப்பம்

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20/06/2024 முதல் 21/06/2024 வரை இரு தினங்கள் 1433 - பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஸ்குமார் அவர்கள் ஆதிதிராவிடர் மக்களுக்கு
பஞ்சமி நிலங்கள், பூமிதான நிலங்கள், உபரி நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை மீட்டு பயனாளிகள் அல்லது பயனாளிகளின் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், எஸ் எப் 7 - ன் வகைப்பாட்டில் உள்ள நிலங்களை நத்த வகைபாடாக மாற்றி விலை இல்லா பட்டா வழங்க வேண்டும் எனவும் , கணியூர் ஆதிதிராவிடர் சுடுகாட்டை தனி நபரிடமிருந்து மீட்டு கொடுக்க வேண்டும் எனவும், கடத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பித்தை வழங்கினார். ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன் , அரசு போக்குவரத்துக் கழகம் எல்எல்எப் மாநில துணைத் தலைவர் சிடிசி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி