மடத்துக்குளம் பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ

571பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷா காந்தி பூ மடத்துக்குளம் கணபதி நகரில் உள்ள ராஜாடிரைவர், கஸ்தூரி என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷா காந்தி பூ பூத்துள்ளது. மாலை 7 மணிக்கு மலர துவங்கி நள்ளிரவில் முழுமையாக மலர்ந்து விடும் வெண்மை நிறமாக பூக்கும் இந்த பூவானது மருத்துவ குணம் உள்ள மலர் எனக் கூறப்படுகிறது.

மேலும் குழந்தை இல்லாதவர்கள் இதை காய வைத்து பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பது நம்பிக்கை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த பூவை இப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்த பூவிற்கு ஆரத்தி காட்டி வணங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி