முத்தூர் அருகே பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு

67பார்த்தது
முத்தூர் அருகே பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் வீரையன் காட்டு தோட்டத்தைச் சேர்ந்த குமார் வயது 40 விவசாயி. இவரது மனைவி வினோதினி 32. குமார் சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். இரவு 11. 30 மணி அளவில் வினோதினி தோட்டத்து வீட்டில் வெளியே காய வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டில் மறைந்திருந்து குமாரின் மனைவி வினோதினியின் கழுத்தில் இருந்த தங்க தாலியை பறித்துள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட வினோதினி தாலிக்கொடி கெட்டியாகபிடித்து கொள்ள பாதி கொடி மட்டும் அறுந்து மர்ம நபர் கையில் சிக்கிக்கொண்டது. மீதி தாலிக்கொடி வினோதினி கையில் இருந்து தப்பியது. இந்த நிலையில் வினோதினி திருடன் திருடன் என சத்தம் போட்டார். வினோதனின் அலறல் சத்தத்தை கேட்டு குமார் வேகமாக ஓடி வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடிய தாலிக்கொடி சுமார் 2 1/2 பவுன் ஆகும். இது பற்றி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் தாலிக்கொடி பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி