மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி

5143பார்த்தது
மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி
கோவை ஒண்டிப்புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சீனிவாசகம் வயது 57.  அதேபோல் கும்பகோணம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் வயது 57, நண்பர்களான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து கரூருக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முத்தூர் சாலை ராசாத்தாவலசு பாத கருப்பண்ண சாமி கோவில் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சீனிவாசகம் மற்றும் அவரது நண்பர் சிவலிங்கம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.  

இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு  தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சீனிவாசகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பலத்த காயமடைந்த சிவலிங்கம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கு குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி