காங்கேயத்தில் 3 ஆண்டு மாரத்தான். நாளை வரை பதிவு செய்யலாம்

69பார்த்தது
காங்கேயத்தில் 3 ஆண்டு மாரத்தான். நாளை வரை பதிவு செய்யலாம்
காங்கேயம் ரன்னர்ஸ் மற்றும் காங்கேயம் டவுன் ரோட்டரி இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு மாரத்தான் போட்டி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் பதிவு செய்ய  நாளை வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போோட்டியானது 5 கிலோ மீட்டர் இரண்டு பிரிவுகளிலும் 10 கிலோமீட்டர் மற்றும் 21. 1 கிலோமீட்டர் என நான்கு பிரிவினில் நடைபெறுகிறது. இப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நினைவுக் கோப்பைகளும் போட்டி தூரத்தை கடந்து வருபவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு "சிப்" பொருத்தப்பட்டு அவர்கள் ஓடிவரும் நேரங்களை துல்லியமாக கணக்கிடப்படுவதாகவும், போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சீருடையாகள் வழங்கப்படுகின்றது என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி