வெள்ளகோவில் 5. 5 டன் முருங்கைக்காய் வரத்து

51பார்த்தது
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 5. 5 டன் முருங்கைக்காய் வரத்து


வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று காலை எட்டு மணி முதலே வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் 5. 5 டன் முருங்கைக்காய்களை  கொண்டு வந்திருந்தனர். இந்த முருங்கைக்காய்களை வாங்குவதற்கு முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் வந்திருந்தனர்.  அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 30 க்கும், மரமுருங்கை ரூ. 30 க்கும், கரும்பு முருங்கை ரூ. 50க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் மதுரை, கோவை, திண்டுக்கல் பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you