மூதாட்டியின் உடலை மயானத்திற்கு தூக்கிச்சென்ற பெண்கள்!

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). வயது மூப்பின் காரணமாக இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து இவருடைய உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தயாராகினர்.

பின்னர் திராவிட கழகத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச்சென்று மின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்து, மின்மயானத்தில் எரியூட்டும் வரை காத்திருந்து ஆண்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி உள்ளனர். பெண்கள் இதனால் மூடநம்பிக்கை ஒழிந்து பெண்ணும் ஆணும் சமமே என்ற பெரியாரின் கொள்கையை நிறைவேற்றிய தாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி