தாராபுரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

52பார்த்தது
தாராபுரத்தில் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் என்பதை மாற்றி அதற்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டிய ஒன்றிய அரசை கண்டித்தும் மீண்டும் இந்திய தண்ட னைச் சட்டம் என்ற பெய ரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய தபால் நிலையம் எதிரே தாராபுரம் வழக் கறிஞர்கள் சங்கத்தின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செழியன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ரமணி, ரங்கசாமி, செல்வராஜ், அண்ணாத்துரை, தென்னரசு, வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஐயப்பன், கனகராஜ், திருநாவுக்கரசு, சிவக்குமார், சித்ரா ஃபாண்ட்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நீதிமன்றத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் தாராபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி