பல்லடத்தில் பாஜக - திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்

3986பார்த்தது
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியளவில் முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் பாஜகவினர் சிலர் பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய செய்தித்தாள்களை தேர்தல் விதிமுறைகளை மீறி விநியோகம் செய்ததாக கூறி பல்லடம் நகர திமுகவினர் சிலர் கையும் களவுமாக பிடித்து கடும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக வாக்குறுதிகளை பதித்த செய்தித்தாள்களை விநியோகம் செய்த நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பல்லடம் பகுதியில் பரபரப்பான சூழல் நிழவி வருகிறது.

தொடர்புடைய செய்தி