நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு வசதியாக சென்னை தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் (06007) சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று (ஏப்ரல் 18) இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. பின்னர், நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை (ஏப்ரல் 19) இரவு 7 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (06008) இயக்கப்படுகிறது.