ஓடும் காரில் தீப்பிடித்தது

55பார்த்தது
ஓடும் காரில் தீப்பிடித்தது
கேரள மாநிலம் கோழிப்பாரையை சேர்ந்த மார்சல் புளோமின் ராந் என்பவர் தனது காரில் சேலத்திலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். அவினா சியை அடுத்து பழங்கரை அருகே வந்த போது காரின் முன்பகுதியில் திடீரென கரும் புகை கிளம்பி சிறிது நேரத்தில் தீப்பிடித்தது.
அவர் உடனடியாக காரை ரோட்டின் ஓரமாக நிறுத்தி கீழே இறங்கி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ கட்டுக் கடங்காததால் அவினாசி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தரப்பட்டது. நிலைய அலுவ லர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ பிடித்திருக்கலாம் என கூறப்ப டுகிறது.

தொடர்புடைய செய்தி