அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

51பார்த்தது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
திருச்சி பால்பண்ணை 4 ரோடு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சர்வீஸ் ரோட்டில் சுமார் 39 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் அந்த வாலிபர் தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி