கஞ்சா போதை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

55பார்த்தது
திருச்சி பெரிய கடை வீதி காசியா பிள்ளை சந்து, கள்ளத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவரான இவர் அந்த பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் அந்தப் பகுதி மாநகராட்சி பூங்காவில் கஞ்சா அடிக்கும் கும்பல் குறித்து போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று அவரை மர்ம கும்பல் வழிமறித்து தாக்கியது. இதில் அவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து நடராஜன், சுகுமார், சேரன், சரவணன் ஆகிய நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கள்ளத்திறவை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரிய கடைவீதியில் தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் இருந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து விழுந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் ஒரே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் போராட்டக்காரர்கள் கலந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி