அரசு பேருந்து நடத்துனர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

62பார்த்தது
அரசு பேருந்து நடத்துனர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக உள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் அலுவலகத்திற்கு வந்து விடுப்பு தருமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க முயன்றார்.
அதிகாரிகள் விடுப்பு கொடுக்க மறுத்ததால் மன உளைச்சலில் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த சக ஊழியர்கள் செல்வராஜ் மீது தண்ணீர் ஊற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி