திருவரம்பூர் பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பிஹெச்இஎல் பயிற்சி மையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த லாரி மோதி காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான திருவாரூர் மாவட்டம் கடவன்குடி பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து பிஹெச்எல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.